உள்நாட்டில் விலையை கருத்தில் கொண்டு சர்க்கரை ஏற்றுமதியை இந்திய அரசு கட்டுப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போர் காரணமாக உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐநா சபை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் உள்நாட்டில் விலையை கட்டுப்படுத்த ஆறு ஆண்டுகளுக்குப்பின் சர்க்கரை ஏற்றுமதியை இந்திய தடை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து பங்குச்சந்தையில் சர்க்கரை நிறுவங்களின் பங்குகள் கடுமையான சரிவை காண தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியான தகவலிலின் படி, இந்த பருவத்தின் ஏற்றுமதியை 10 மில்லியன் டன்னாகக் இந்திய அரசு குறைக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தியாளர் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய ஏற்றுமதியாளராக உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் விலையை உயர்வை கருத்தில் கொண்டு இந்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் தற்போது சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவலால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…