இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,124 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,31,42,192 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சிகிச்சைப் பலனின்றி 17 பேர் இறந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,507 ஆக அதிகரித்துள்ளது' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 193.53 கோடிக்கும் அதிகமான (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் இலவசமம் மற்றும் கட்டண மூலம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், 16.14 கோடிக்கு மேல் (16,14,73,595) கோவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…