ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானின் பார்மர் அருகே நேற்று நள்ளிரவு மிக் 21 ரக போர் விமானத்தில், இரண்டு விமானிகள் பயிற்சிக்காக சென்றனர். அப்போது இந்த விமானம் எதிர்பாரத விதமாக விபத்தில் சிக்கி கீழே விழுந்து, தீப்பிடித்து எரிந்தது. இதில் உள்ளே இருந்த இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விமானப் படை அதிகாரிகளை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, விபத்து குறித்து கேட்டறிந்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…