கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள் இந்தியாவில் இருந்து அதிகளவில் கோதுமையை இறக்குமதி செய்தது. இதனால் இந்தியாவில் கோதுமை விலை உச்சத்தை தொட்டதால் மக்கள் அதிர்சியடைந்தனர். இந்நிலையில் கோதுமை விலையை கட்டுப்படுத்தும் வகையில், கோதுமை ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. பிற நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கு கோதுமை தேவை இருப்பின் மட்டுமே அரசின் அனுமதியோடு ஏற்றுமதி செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.
இதனால் இந்தியாவில் வரும் காலங்களில் கோதுமை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…