ராணுவத்தின் புதிய அக்னிபத் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், மொத்தம் 491 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும், நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக, 254 பயணிகள் ரயில்களும், 229 சரக்கு எக்ஸ்பிரஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 8 சரக்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், பஞ்சாபில் இருந்து மும்பை செல்லும் ரயில்கள் இன்று ஜூன் 20ம் தேதி ரத்து செய்யப்படும்.
, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள நகரங்களில் இருந்து வரும் இரண்டு ரயில்களின் வழித்தடம் ஜூன் 20 ஆம் தேதி குறைக்கப்பட்டுள்ளது." மூன்று நாட்களில் (ஜூன் 15 முதல் ஜூன் 17 வரை), சுமார் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் 130 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…