தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வங்கி ஊழியர் ஒருவர் எனது மரணத்திற்கு எஸ்ஐ தான் காரணம் என கூறிய வாக்கு மூலம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த மோகந்தாஸ் என்பவர் எஸ்பிஐ வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை போலீசாஅரிடம் தெரிவித்தால், உடற்கூராய்வு என்று கூறி உடலை அலைக்கழிப்பார்கள் என்றும், மாரடைப்பால் உயிரிழந்ததாக உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்,
இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது, அதில், என் தற்கொலைக்கு சூரமங்கலம் காவல்நிலையத்தில் பணியாற்றி, கடந்த மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றுவிட்ட சிறப்பு எஸ்.ஐ சேகர், அவருடைய மனைவி சாந்தி, மகள் ஆகியோர்தான் காரணம் என பேசியுள்ளார். அதில் தன்னிடம் நகைகளை வாங்கிய காவலர் அதனை தராமல் ஏமாற்றி வந்ததாகவும், இதனால் மகளின் கல்வி கட்டணத்தை கூட கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளான நான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிய அவர், தன்னுடைய நகையை மீட்டு மகளின் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என கண்னீருடன் தெரிவித்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீடியோவை கைப்பற்றிய போலீசார், ட்தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…