பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை திங்கள்கிழமை முதல் இந்தோனேசியா நீக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
உலகின் முன்னணி பாமாயில் ஏற்றுமதியாளரான இந்தோனேஷியா, ஏப்ரல் 28 அன்று பாமாயில் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இதனால் உலகளவில் சமையல் எண்ணெய் விலை உயர்வை சந்தித்தது. இதனைதொடர்ந்து பாமயில் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏராளமான பாமயில் தொழில் சார்ந்த விவசாயிகள், இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும், நாட்டின் பிற பகுதிகளிலும், போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக இன்று பேட்டியளித்த அந்நாட்டு அதிபர் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, பாமாயில் தொழிலில் ஈடுபட்டுள்ள 17 மில்லியன் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாமாயில் ஏற்றுமதிக்கான தடையை நீக்குவதாகவும், மே 23 முதல் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கபடும் என அறிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…