கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரியில் பூக்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட்டில் கேரளா வியபாரிகள் குவிந்து வருகின்றனர். மேலும், தோவாளை சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்றைய தினம் 20 டன் பூக்கள் விற்பனைக்கு வந்த நிலையில் இன்று 40 டன் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியபாரிகள் தெரிவித்துள்ளனர். பிச்சிப்பூ ஒரு கிலோ நேற்று 250 ரூபாய் இன்று 400 ரூபாய், மல்லிப்பூ 500 ரூபாய் க்கும் விற்பனை. அரளிப்பூ 110 ரூபாய் க்கும் விற்பனையாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…