ரஷ்யாவுக்கு ஈரான் ட்ரோன்களை அனுப்ப தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் 3மாதங்களை கடந்து இன்னும் உக்கிரமாக நடந்து வருகிறது. இந்தபோரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்ப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஷ்யா தரப்பில் பலத்த சேதம் ஏற்ப்பட்டுள்ளதாக பிரிட்டன் மற்ரும் அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் நடந்து வரும் போரில் பயன்படுத்துவதற்காக ஆளில்லா விமானங்களையும், தாக்குதல் திறன் கொண்ட ட்ரோன்களையும் ரஷ்யாவுக்கு வழங்க ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மாத தொடக்கத்தில் இந்த ஆளில்லா விமானங்களை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து ரஷ்யப் படைகளுக்கு ஈரான் பயிற்சி அளிக்கத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, கனடா, உள்பட பல மேற்கத்திய நாடுகள் பல்வேறு விதமான நவீன ஆயுதங்களையும், உளவுத்தகவல்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…