உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் குடியுரிமை பெறும் சட்டத்தில் அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 150 வது நாளாக ரஷ்யா உக்கிரமாக போர் நடத்தி வருகிறது. இந்தப் போரால், உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதக் கிடங்குகளை குறி வைத்து ரஷ்ய படைகள் துல்லிய தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ளா உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ரஷ்யா கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளில் வாழும் மக்கள் ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான புதிய ஆணையில் விளாடிமிர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…