சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஏற்ப்பட்ட வன்முறையில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டது. இந்நிலையில்,
பள்ளியில் ஆய்வு செய்து, வகுப்பறைகள் உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் தேர்வெழுத 1,200 மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டதையடுத்து , சக்தி பள்ளி தேர்வு மையத்திற்கு பதிலாக கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…