தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் மற்றும் எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி , எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி சபாநயகரிடன் நேரில் சென்று கடிதம் வழங்கியுள்ளார். அந்த கடிதத்தில், எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கடிதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தனியார் ஹோட்டலில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், கழகத்தின் சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் மற்றும் எதிர்க்கட்சி துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஈபிஎஸ் உடன் எதிர்க்கட்சி துணை தலைவராக தேர்வான ஆர்.பி.உதயகுமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…