கள்ளக்குறிச்சியில் உருவக்கேலி செய்ததால் ஆத்திரமடைந்த மாணவன், சக மாணவனை கொலை செய்த சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் உள்ள தனியார் பள்ளியில் சிபிஎஸ்சி 11ம் வகுப்பு படித்து வந்த மாணவன் கோகுல்ராஜ். இவர் கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரததால், அவருக்கு போன் செய்துள்ளனர். போனை எடுக்கததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைதொடர்ந்து அவர் படித்த பள்ளியின் அருகே சிதைக்கப்பட்ட நிலையில் சிறுவன் உடல் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அது பள்ளி மாணவன், கோகுல்ராஜ் என தெரியவந்தது. பின்னர் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்த போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில்,ஒரு மாணவன், கோகுல் ராஜ் தன்னை தொடர்ந்து உருவக்கேலி செய்து வந்ததாகவும், பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காததால் அத்திரத்தில் அவரை அரிவாளல் பின்புறம் வெட்டி, பின்னர் கத்தியால் சரமாரியாக குத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனைக்கேட்டு அதிர்ந்த போலீசார் மாணவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…