குண்டூரில் மது பாட்டிலில் மதுவுடன் சேர்ந்து பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் பொன்னூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாபட்லா பேருந்து நிலையம் அருகே அரசு நடத்தும் மதுபானக் கடையில் சிலர் மதுபாட்டில்களை வாங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மது பாட்டிலில் செத்த பாம்பு இருப்பதை பார்த்த அவர்கள், பாட்டிலை மாற்றுமாறு கடை உரிமையாளர்களிடம் கேட்டதால், பிரச்னை வெடித்தது. முதலில், மது பாட்டிலை மாற்ற மறுத்த கடை உரிமையாளர்கள், கடும் வாக்குவாதத்திற்குப் பின், மது பாட்டிலை மாற்றி கொடுத்துள்ளனர்.
எனினும், மது பாட்டிலில் பாம்பு கிடந்ததால், அங்கு மது வாங்க வந்த "குடி" மக்கள் பீதியடைந்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…