மயிலாடுதுறை அருகே இரு இரு சக்கர வாகனங்கள் எதிரெதிரே வந்தபோது மோதி விபத்துக்குள்ளான நிலையில், பின்னே வந்த காரின் டிரைவரின் சாமர்த்தியத்தால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மயிலாடுதை செம்பனார் கோவில் அருகே உள்ள காலகஸ்திநாதபுரம் மெயின்ரோட்டில், எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கீழே விழுந்தனர்.
அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தின் பின்னே வேகமாக வந்த கார் ஒன்றின் டிரைவர் விபத்தை பார்த்தவுடன் சுதாரித்துக் கொண்டு, காரை ஓரமாக திருப்பி நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படாமல், தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…