பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட சின்னத்திரை நடிகை மரணமடைந்துள்ளது கன்னட திரையுலகில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீதா, டோரேசனி போன்ற பிரபல கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சேத்தனா ராஜ். 21 வயதே ஆகும் இவர் அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனை குறைக்க திட்டமிட்டு, அதனை பெற்றோருக்கு தெரியாமல் பெங்களூருவில் உள்ள ஷெட்டி மருத்துவமனைக்கு நேற்று சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கொழுப்பை குறைக்கலாம் என மருத்துவரகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த போது நடிகை, சுய நினைவை இழந்ததால் பதறிப்போன மருத்துவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட நிலையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நடிகை திடீரென உயிரிழந்தது பெரும் அதிர்சியை சோகத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…