கல்லூரி மாணவர்கள் இனி மோதலில் ஈடுபட்டல் நடவடிக்கை கடுமையானதாக இருக்கும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ''நேற்று (16ம் தேதி) ரூட்டு தல பிரச்னை தொடர்பாக 3 இடங்களில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்பதால் இதில் மென்மையான போக்கை கையாண்டோம். இனி அப்படியிருக்காது, இதுபோன்ற புகார்கள் வந்தால், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…