மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
சீனர்களுக்கு சட்ட விரோதமாக விசா வாங்கி தந்ததாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் நேற்று விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று 2வது நாளாக சிபிஐ அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகியுள்ளார்.
இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.அதில், நாடாளுமன்ற சிறப்புரிமையை சிபிஐ கடுமையாக மீறியதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே தன்னையும், தனது குடும்பத்தையும் விசாரணை அமைப்புகள் குறிவைக்கின்றன என கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…