கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியின் 1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருடு போயுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்சி நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த கலந்து கொண்டார். அப்போது அவர் பயன்படுத்தி வந்த 1.50 லட்சம் மதிப்பிலான பேனா காணாமல் போயுள்ளது. இதனையடுத்து பேனாவை யாரேனும் திருடியிருக்கலாம் என்று கிண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் அந்த பேனா அவருடைய தந்தை வசந்தகுமார் பயன்படுத்தி வந்ததாகவும், தந்தை ஞாபகமாக அதை பயன்படுத்தி வந்ததாக விஜய் வச்ந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…