கோவை மாநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நாய் கடிக்கு 4,400க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரம் பணி முடிந்து வரும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி விரட்டி நாய் கடிப்பதாக கோவை வாசிகள் குமுறுகின்றனர். குறிப்பாக உக்கடம் புல்லுக்காடு, G M நகர், கரும்புக்கடை, பீளமேடு போன்ற பல்வேறு இடங்களில் பிரச்னை தொடர்கதையாக உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும், நாய் கடித்து 4,400 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…