நீட் தேர்வின் போது உள்ளாடையை அகற்றச் சொல்லி வற்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நேற்றைய தினம் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வாக நீட் நடைபெற்றது. இந்நிலையில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில், மாணவிகளின் உள்ளாடையை அகற்ற வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. உள்ளாடையில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதிக்க முடியாது என மாணவிகள் தடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர், பல மாதங்கள் கடுமையாக படித்தும் இதுபோல மன ரீதியான தொல்லையால் என் மகள் சரியாக தேர்வெழுதவில்லை; அழுதுகொண்டே வெளியே வந்தாள் என போலீசில் புகார் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…