கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கோட்டயம், பத்தனம்திட்டா, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பல ஓடைகள் நிரம்பி வழிகிறது. கடலுண்டி (மலப்புரம்), பாரதப்புழா (பாலக்காடு), ஷிரியா (காசர்கோடு), கரவனூர் (திருச்சூர்), காயத்ரி (திருச்சூர்) ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
அடைமழை காரணமாக மக்கல் விழ்ப்புடன் இருக்கும் படி அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…