Kerala Singer Death News: இசைத்துறையில் மிகப் பிரபலமான பாடகர் மாரடைப்பு காரணமாக மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போது மரணம் அடைந்தார்.
மலையாள இசைத் துறையின் மேடை நிகழ்ச்சிகளில் பிரபலமானவர் மற்றும் பழம்பெரும் நடிகராக விளங்குவர் எடவா பஷீர். 78 வயதான இவர் மே மாதம் 28 ஆம் நாளான நேற்று சனிக்கிழமை ஆலப்புழாவைத் தளமாகக் கொண்ட ஒரு குழுவின் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருக்கும் போது, மேடையிலே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் இரவு 9.30 மணியளவில் நடந்துள்ளது. திருவனந்தபுரம் எடவாவைச் சேர்ந்த பஷீர், கேரளாவில் மிகப் பிரபலமான பாடகர் ஆவார். மேடையில், பாடிக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…