Latest News in Tamilnadu: கடந்த சில நாள்களாக, 150 ரூபாயைத் தொட்ட தக்காளியின் விலை தற்போது குறைந்துள்ளது.
கடந்த சில நாள்களாக, தென் மேற்கு பருவமழை காரணமாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதனால், தமிழகத்தில் தக்காளியின் விலை ரூ. 150-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வட மாநிலங்களிலும் காய்கறி வரத்து குறைந்து காணப்படுவதால், சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் 10 ரூபாய் அளவில் விற்கப்பட்டு வந்த தக்காளி விலை உயர்ந்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
கடந்த 1 வார கால அளவில், உயர்ந்து கொண்டே சென்ற தக்காளியின் விலை தற்போது ரூ. 10 குறைந்து ரூ. 90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வரும் நாள்களில் தக்காளியின் விலை தொடர்ந்து குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…