பாஜக செய்தி தொடர்பாளருக்கு தலிபான்கள் கண்டணம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பாஜகவின் டெல்லி நிர்வாகியான நவீன்குமார் ஜிந்தால் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்னை தொடர்பாக நுபுர் சர்மா மீது இபிகோ 153ஏ - மத மோதலை தூண்டும் விதமான பேச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மகாராஷ்டிரா காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இதனைதொடர்ந்து முகமது நபி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தி தொடர்பாளருக்கு தலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில் இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமியர்களின் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…