வரும் 28ம் தேதி 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடவுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்கி ஆக. 10 வரை நடைபெற உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு தமிழக கலாச்சாரப்படி சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்கவிழா அன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபடுவதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…