வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் கலக்கமடைந்துள்ளனர்.
எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 14 கிலோவீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையை ₹3.50 உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு மூலம் டெல்லியில் 14 கிலோ சிலிண்டர் விலை ரூபாய்.1003 ஆக உள்ளது. சென்னையில் ரூபாய் 1,058.50 ஆக உள்ளது. மே 7 ஆம் தேதி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மார்ச் 22 அன்று, மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் ₹50 அதிகரித்தது. முன்னதாக, 6 அக்டோபர் 2021க்குப் பிறகு, வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…