ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் இறக்குமதியை பிரான்ஸ் அரசு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதி நிறுத்தப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்திருந்தார். ஆனால் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எரிபொருள் பெறுவதை கடந்த 2 மாதங்களாக பிரான்ஸ் அரசு அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனுக்கு நாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் ஆயுதங்களை வழங்கிக்கொண்டு மறுபுறமும், இறக்குமதி நிறுத்தப்படும் என கூறி, தள்ளுபடி விலையில் எரிபொருள் பிரான்ஸ் வாங்கியுள்ளதை குறிப்பிட்டு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…