அரசு ஊழியர்கள் தங்களுக்கான பதவி உயர்வை அடிப்படை உரிமையாக கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாத்தில் முன்பு அரசு ஊழியர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இதனால் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக பல புகார்கள் எழுந்த நிலையில், சார்நிலைப் பணி விதிகளின் படி டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் ரேங்க் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தன்னை பொது சுகாதார பணியாளராக பதவி உயர்வு வழங்க கோரி சுடலைமாடன் மற்றும் முருகன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், பதவி உயர்வு சட்டத்தின் அடிப்படையில் அனைத்து பதவி உயர்வுகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…