தமிழகத்தில் ஐடிஐ படித்தவர்களுக்கும் 10, 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது ஐடிஐ படிப்புகளுக்கு 8வது மற்றும் 10வது படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஐடிஐ முடித்தவர்கள் கல்லூரி படிப்புக்கு செல்லும்போது 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு கட்டாயம் எனக் கூறப்படுவதால் வாய்ப்பு மறுக்கப்படுவதாக தெரிகிறது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஐடிஐ தேர்ச்சி பெறும் அனைவருக்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்படும் என அறிவித்து இருந்தார். அதன்படி ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 மற்றும் 12ஆம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்க தற்போது அரசாணை வெளியிப்பட்டுள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…