மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 79 வயது முதியவரிடம் பேய் ஓட்டுவதாகக் கூறி ரூ.15.87 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் மீது தானே காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தானேயில் தனியாக வசிக்கும் அந்த முதியவரிடம், தீய சக்திகள் அவரது வீட்டிற்குள் இருப்பதாகக் கூறி, அவற்றை விரட்ட சில சடங்குகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
அந்த முதியவரும் இவர்கள் கூறியதை நம்பிய நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான சடங்குகளுக்காக அவர் பெண்கள் இருவருக்கும் ரூ. 15.87 லட்சத்தை வழங்கியுள்ளார்.
ஒருகட்டத்தில் இந்த மோசடியை உணர்ந்துகொண்ட முதியவர், காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். இதையடுத்து இரண்டு பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போது வரை இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…