நாடு முழுவதும் கோதுமை தட்டுப்பாடு காரணமாக இனி ரேஷன் கடைகளில் இலவச கோதுமை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 80 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு இலவச உனவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மையில் மத்திய உணவுத்துறை அமைச்சகம் அதில், சில திருத்தங்களை செய்துள்ளது.
அதன்படி, அரசு கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்து, தற்போது அரிசிக்கான ஒதுக்கீட்டை உயர்த்தியுள்ளது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த மாற்றம் முன்னதாகவே செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, இந்த மாநிலங்களின் மக்களுக்கு முன்பை விட குறைவான கோதுமையும், அதிக அளவு அரிசியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும், இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…