ஆம்பூரில் அரைபோதையில் தன் மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரசு கலைக்கல்லூரி பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் முதல் மனைவி, இறந்து விட்ட நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் இறந்து விட்ட நிலையில் அவரது மனைவி தனலட்சுமியை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இடையே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனலட்சுமி கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தேவேந்திரன், தனலட்சுமி ரயில் நிலையம் சாலையோரத்தில் உறங்கிக்கொண்டிருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மது குடித்து விட்டு அங்கு சென்ற தேவேந்திரனுக்கு, எல்லோரும் பர்தாவுடன் தூங்கொண்டிருந்த நிலையில், அரை போதையில் தன் மனைவியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
கடைசியில் தன் மனைவி என நினைத்து கழுத்து, மார்பக பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு தனலட்சுமி எழுந்த நிலையில், குத்தியது கவுசர் என்ற வேறோருவரின் மனைவி என தெரியவந்தது. பின்னர் தனலட்சுமியையும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேவேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…