மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்ப்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் துபுல் ரயில் நிலையம் அருகே கனமழை காரணமாக ஏற்ப்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால் ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட இடத்திற்கு மருத்துவக்குழுக்கள் விரைந்துள்ளன. மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங் அவசர ஆலோசனை நடத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…