மன உளைச்சல் காரணமாக மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி, திருவாரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் அரசு மருத்துவமனையில் பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் அங்குள்ள கல்லூரி விடுதியில் அவர் தங்கியிருந்து அறை நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் த வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரனையில் மானவி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…