வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 11 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கப்போகிறது. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அமேசான், பிளிப்கார்ட் போல இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஈ காமெர்ஸ் நிறுவனம் மீஷோ. இதன் வளர்ச்சி சமீப வருடங்களில் மிக அதிக அளவில் இருக்கிறது. குறைந்த விலை நிறைந்த தரம் எனும் தாரக மந்திரத்தோடு பணிபுரியும் இதன் ஊழியர்களுக்கு 11 நாட்கள் தொடர் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது தனியார் நிறுவனமான மீஷோ.
நாடு முழுக்க அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, தீபாவளி என பல்வேறு சுப தினங்கள் நிகழ இருக்கின்றன. முன்பு பண்டிகை காலங்கள் என்றால்தான் துணிக்கடைகளில் மிக அதிக கூட்டமும் அதிக வியாபாரமும் நடைபெறும். அப்படி இருக்கும்பட்சத்தில் எப்படி இந்த விடுமுறை சாத்தியம் என்பது பலரையும் ஆச்சரியமடையச் செய்துள்ளது.
அக்டோபர் 22ம் தேதி முதல், நவம்பர் 1ம் தேதி வரை தொடர் விடுமுறை அளித்துள்ளது அந்நிறுவனம். ஊழியர்களின் மனநலம் முக்கியம் எனுமாறு அதன் நிறுவனர் சஞ்சீவ் பன்வால்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…