பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது மேலும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பைக்கில் செல்வதை யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு, அதன் மூலம் மிகவும் பிரபலாமானவர் தான் டிடிஎப் வாசன். இவர் பைக்கில் அதிகவேகமாக சென்று வீடியோ எடுத்து வெளியிடுவதற்கு எதிராக ஏற்கனவே பலர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் டிடிஎப் வாசன் ஜிபி முத்துவை பின்னால் அமரவைத்துக்கொண்டு அதிவேகமாக பைக்கில் சென்றுள்ளார். இதற்கான வீடியோவை தனது செயலிலும் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கோவை போத்தனூர் போலீசில் சாலை விதிகளை மீறுதல், அஜாக்கிரதையாக மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது கோவை சூலூர் காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டம் 279 (ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டுதல்), மோட்டார் வாகன சட்டம் 189இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர் மீதான வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…