Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

 தேநீர் விருந்து புறகணிப்புக்கு பின் முதல்முறையாக முதல்வர், ஆளுநர் சந்திப்பு..!

Bala May 16, 2022 & 10:48 [IST]
 தேநீர் விருந்து புறகணிப்புக்கு பின் முதல்முறையாக முதல்வர், ஆளுநர் சந்திப்பு..!Representative Image.

சென்னை பல்கலைக் கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழாவில்  ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் அமர்ந்துள்ளனர். 

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார். உயர்கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார்.

இதனையடுத்து, தேநீர் விருந்து புறக்கணிப்பு, ஆளுநர் போஸ்ட் மேன் தான் என காரசரமாக இருந்த நிலையில், பட்டமளிப்பு விழாவுக்காக சென்னை பல்கலைகழகம் வந்த ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் மகிழ்சியாக வரவேற்றார்.

இந்தி, நீட் உள்ளிட்ட விவகாரங்களில் கருத்து மோதல் நிலவும் நிலையில், ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்