இலவச பாடப்புத்தகளுக்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதைனையடுத்து பேசிய அமைச்சர், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் உட்பட 10 உபகரணங்கள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்தார். மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் மதிப்பெண்களை கண்டு மனம் தளரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…