Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும்.. அமைச்சர் துரைமுருகன் தடாலடி!!

Sekar June 15, 2022 & 19:31 [IST]
ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும்.. அமைச்சர் துரைமுருகன் தடாலடி!!Representative Image.

தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது என்றும் அதை மீண்டும் உயிர்ப்பிக்க எந்த கொம்பனாலும் முடியாது என ஆளுநரை மறைமுகமாக அமைச்சர் விமர்சித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர், இது ஆன்மீக மண் என்றும் சனாதனத்தை மீண்டும் நிறுவுவது குறித்தும் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் இன்று வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகம் சனாதனத்திற்கு சாவு மணி அடித்த மண் என்றும் இந்த மண் குறித்து ஆளுநருக்கு தெரியாது என்றும் சனாதனத்தை உயிர்பிக்க ஆளுநர் அல்ல எந்த கொம்பனாலும் முடியாது என்றும் பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்