Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பத்திரங்களை காணவில்லை:- சிவி.சண்முகம் பரபரப்பு புகார்..!

Bala July 23, 2022 & 12:54 [IST]
பத்திரங்களை காணவில்லை:- சிவி.சண்முகம் பரபரப்பு புகார்..!Representative Image.

அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுச்செயலஆளர் தொடர்பாக இபிஎஸ்- ஓபிஎஸ் தரப்பினரிடையே கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. இந்த மோதலில் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும், பாதுகாப்பு கருதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துரை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சீலை அகற்றக்கோரி இபிஎஸ் - ஒபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சீலை அகற்றி, அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாயிடம் வழங்குமாறு உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் சாவியை பெற்றுக்கொண்ட இபிஎஸ் தரப்பு அலுவலகத்தில் முக்கிய பொருட்கள் திருடு போயுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் , கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்கள், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். 

மேலும், அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில், சி.வி.சண்முகம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்