சீன அதிபர் உடனான சந்திப்பின்போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடிதான் உண்மையான தமிழர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக அதிமுக சார்பில் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி மதுரையில் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, லெஜண்ட் சரவணா போல கோட் போட்டுக்கொண்டு நடந்து வந்து செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஆனால், அதில் செஸ் சாம்பியன்களை காணவில்லை. சீன அதிபர் உடனான சந்திப்பின்போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடிதான் உண்மையான தமிழர்.ஸ்டாலின் தன்னை தமிழர் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார் என காட்டமாக விமர்சித்தார். மேலும், தமிழக சட்டம் ஒழுங்கில் மிக மோசமாக உள்ளது என சர்வே சொல்வதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த நாங்கள்தான் என சிலர் (பாஜக) சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…