ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்ததாக ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனை திங்கள்கிழமை புகார் அளித்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் அம்பானி குடும்பம் குறிவைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக பிப்ரவரி 2021 இல் 20 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஒரு மிரட்டல் குறிப்பு கொண்ட அம்பானியின் வீட்டு ஆண்டிலியாவுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கார்பியோ காரில் இருந்து மீட்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, அம்பானியில் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்ததாக ரிலையன்ஸ் அறக்கட்டளை புகார் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த மும்பை போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…