மும்பை குர்லா பகுதியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர்.
மும்பை குர்லாவின் நாயக் நகர் சொசைட்டியில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல்றிந்து வந்த தீயணைப்பு துறையினர். மீட்பு பணியில் ஈடுபட்டனர், அதில் 8 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் காட்கோபர் மற்றும் சியோனில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 20 முதல் 22 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…