எம்.பி பதவிக்கு தகுதியல்லாத நபரா நான்? 18 ஆண்டுகள் காத்திருப்பு ஏமாற்றம் அளிக்கிறது, என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கான தேர்தல் ஜூன் 10 ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இநிலையில், காங்கிரஸ் சார்பில் தமிழகத்தின் சார்பாக ப.சிதம்ரம், கர்நாடக சார்பில் ஜெய்ராம் ரமேஷ், ஹரியான சார்பில், அஜய் மாக்கேனும், சாத்தீஸ்கர் சார்பில், ராஜீவ் சுக்லா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்த முறையும் நக்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா, தனது டுவிட்டர் பக்கத்தில், கட்சியிஜ்ன் இணைந்த போது, மாநிலங்களவை வாய்ப்பு தரப்படும் என சோனியாகாந்தி உறுதியளித்தார். ஆனால் நான் கட்சியில் இணைந்து 18 ஆண்டுகள் ஆகியும் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாநிலங்களவை பதவிக்கு நான் தகுதியில்லை என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…