திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்ப்படுத்திய நிலையில் அதற்கு விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார்.
மாமல்லபுரத்தில் நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், புதுமண தம்பதிகளான இருவரும் நேற்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் இருவரும் பங்கேற்கின்றனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனைதொடர்ந்து திருப்பதியில் காலணிகளுடன் நடமாட தடை செய்யப்பட்ட இடத்தில் நடிகை நயன்தாரா காலணி அணிந்து போஸ்ட் வெட்டிங் சூட்டில் கலந்துகொண்டதுசர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இதனையடுத்து போட்டோ எடுக்கும் அவசரத்தில் காலணியை கவனிக்கவில்லை என்று மன்னிப்பு கோரினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…