Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீட் எழுதிய மாணவி தற்கொலை :- அடுத்தடுத்து சோகம்...

Bala August 12, 2022 & 10:26 [IST]
நீட் எழுதிய மாணவி தற்கொலை :- அடுத்தடுத்து  சோகம்...Representative Image.

கரூர்  அருகே தோல்வி பயத்தால் நீட் தேர்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம் தரகம்பட்டியை அடுத்த கொளுத்தினியை பட்டியை சேர்ந்த சேகர், லட்சுமி தம்பவ்தியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகளாக பிரீத்தி, உப்பிடமங்கலம் அருகேயுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்து முடித்துள்ளார். இதனையடுத்து அவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில் தோல்வி அடைந்துள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுதிய நிலையில், நான் தோல்வியடைந்து விடுவேனா என அடிக்கடி புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடலை கண்ட பெற்றோர் கதறி அழுதுள்ளனர். தகவலறிந்து வந்த லாலாபேட்டை போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மாணவி தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்