தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு 10% போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் கொண்டாடப்பட உள்ளது. அதன் படி, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, மின்சார வாரியம், டாஸ்மாக், ஆவின், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.
அதன் படி, இந்த ஆண்டில் பொதுத் துறையின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 10% வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டும் தீபாவளி போனஸாக அரசு ஊழியர்களுக்கு 10% வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…