Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மீண்டும் மீண்டுமா?...சர்ச்சையில் விக்கி-நயன் ஜோடி...அடுத்து என்ன நடக்கபோகுதோ..!

madhankumar June 15, 2022 & 15:21 [IST]
மீண்டும் மீண்டுமா?...சர்ச்சையில் விக்கி-நயன் ஜோடி...அடுத்து என்ன நடக்கபோகுதோ..!Representative Image.

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போதிருந்து கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிதான் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. கடந்த 9 ஆம் தேதி இவர்கள் இருவருக்கும் மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. முக்கிய திரை பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் திருமணத்திற்கு வந்திருந்தனர். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்களுக்கு விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டது, மேலும் சுமார் 1 லட்சம் ஆதரவற்றோருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் இவர்கள் திருமணத்தை திருவிழாபோல் கொண்டாடினர்.

கடுமையான கட்டுப்பாடு:

விக்கி நயன் திருமண விழாவிற்கு வரும் பிரபலங்கள் உட்பட யாராக இருந்தாலும் அவர்கள் செல்போனில் படம்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் திருமண அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் திருமணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஊடகங்கள் யூடியூப் சேனல்கள் என யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் திருமணம் நாடாகும் ரிசார்ட்டை சுற்றி உள்ள குறிப்பிட்ட தூரத்திற்கு யாரும் வரக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ஒருவழியாக திருமணம் முடிந்து மறு நாள் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய விக்கி நயன் தம்பதிகள் சென்றிருந்தனர், அப்போது நயன்தாரா கோவில் வளாகத்திற்குள் காலில் செருப்பு அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தார் அந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது குறித்து பகிரங்கமாக விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரினார். இருப்பினும் காலணியுடன் போட்டோ ஷூட் நடத்தியதாக நயன்தாரா மீது கோவில் நிர்வாகம் குற்றம் சாட்டியது. 

தற்போது ஒரு புதிய பூதம் கிளம்பியுள்ளது. திருமணத்தின் போது கடற்கரை பொது இடம் என்பதால் அங்கு ஏன் பொது மக்களை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது விக்கி நயன் திருமண வாழ்க்கையில் நடந்த மற்றுமொரு சர்ச்சையாக பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்