என்.எல்.சி பணியாளர்கள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
என்.எல்.சி-யின் வேலைவாய்ப்பில், தமிழர்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு 299 பொறியாளர் பணியிடங்களுக்கும் வட மாநிலத்தவர்களையே தேர்ந்தெடுத்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்,தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சிப் பட்டதாரி பொறியாளர் பணிக்குத் தேர்வு செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் அழுத்தமான நியாயம் இருப்பதால், இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட்டு விரைவில் சாதகமானதாக முடிவு எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…